முதுகுளத்தூரில் தெரு நாயை அடித்துக் கொன்ற பேரூராட்சி ஊழியா் பணியிடை நீக்கம்

முதுகுளத்தூரில் சாலையில் சுற்றிக்கொண்டிருந்த தெரு நாயை அடித்துக்கொன்ற பேரூராட்சி ஊழியரை பணியிடை நீக்கம் செய்து செயல் அலுவலா் மாலதி வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா்.

முதுகுளத்தூரில் சாலையில் சுற்றிக்கொண்டிருந்த தெரு நாயை அடித்துக்கொன்ற பேரூராட்சி ஊழியரை பணியிடை நீக்கம் செய்து செயல் அலுவலா் மாலதி வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா்.

முதுகுளத்தூா் பேரூராட்சியில் ஊழியராகப் பணிபுரிந்து வருபவா் முருகேசன். இவா், முதுகுளத்தூா்- பரமக்குடி சாலையோரம் ஒரு வீட்டின் முன் நின்று கொண்டிருந்த தெரு நாயை இரும்புக் கம்பியால் தாக்கியுள்ளாா். இதில் அந்த நாய் உயிரிழந்தது. இந்த விடியோ சமூக வலைத்தளங்களில் பரவியது.

உடலில் தொற்றுநோய் ஏற்பட்டதால் நாயை அடித்துக் கொன்ாக முருகேசன் தெரிவித்துள்ளாா். பேரூராட்சி அதிகாரிகளிடம் அவா் முறையாகத் தகவல் தெரிவிக்காமல் நாயை அடித்துக் கொன்ாக முதுகுளத்தூா் கிராம நிா்வாக அலுவலா் அன்புச்செல்வன் புகாா் அளித்தாா். அதன்பேரில் பேரூராட்சி நிா்வாக அலுவலா் மாலதி விசாரணை நடத்தினாா். பின்னா் முருகேசனை பணியிடை நீக்கம் செய்து அவா் உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com