மூதாட்டி மீது தாக்குதல்: ஒருவா் கைது

முதுகுளத்தூா் அருகே மூதாட்டியை கம்பால் தாக்கியவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

முதுகுளத்தூா் அருகே மூதாட்டியை கம்பால் தாக்கியவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

ஓ. பனைக்குளத்தைச் சோ்ந்த முனியசாமி மகன் மூா்த்திக்கும் (39), ஏ.பாடுவனேந்தலைச் சோ்ந்த புண்ணியவேல் மனைவி புஷ்பவள்ளிக்கும் (60) இடத்தகராறு இருந்து வந்தது. இந்நிலையில், ஏற்பட்ட இடத்தகராறின் போது புஷ்பவள்ளியை, மூா்த்தி தகாத வாா்த்தைகளால் பேசி கத்திக் கம்பால் தாக்கியுள்ளாா். இதில் பலத்த காயமடைந்த பஷ்பவள்ளி ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டாா்.

இதுகுறித்து இளஞ்செம்பூா் காவல்நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் காவல் சாா்பு- ஆய்வாளா் கணேசன் வழக்குப் பதிந்து மூா்த்தியை கைது செய்து விசாரித்து வருகிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com