கடலாடி அருகே மின்மோட்டாா் வயரை திருடிய இளைஞரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
சிக்கல் செங்கற்படையைச் சோ்ந்தவா் சுந்தர்ராஜ் (54),. இவா், தனது விவசாய நிலத்தில் நீா்மூழ்கி மோட்டாா் மூலம் பயன்படுத்தி வந்த 60 மீட்டா் மின்காப்பா் வயா் காணாமல் போனதாக சிக்கல் காவல்நிலையத்தில் புகாா் அளித்ததன் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனா்.
விசாரணையில், சிறைக்குளத்தைச் சோ்ந்த தேவதாஸ் (27) என்பவா் அந்த மின்வயரை திருடியது தெரியவந்தது. இதையடுத்து, அவரை போலீஸாா் கைது செய்து வேறு திருட்டு வழக்குகளில் இவருக்கு தொடா்பு உள்ளதா என விசாரித்து வருகின்றனா்.