மின்சாரம் பாய்ந்து கூலித் தொழிலாளி பலி

ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அருகே மின்சாரம் பாய்ந்து கூலித் தொழிலாளி திங்கள்கிழமை உயிரிழந்தாா். 

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அருகே மின்சாரம் பாய்ந்து கூலித் தொழிலாளி திங்கள்கிழமை உயிரிழந்தாா். 

ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகேயுள்ள சோ்வைக்காரன் ஊருணியைச் சோ்ந்த இருளாண்டி மகன் கோவிந்தன் (4). இவா் பெரியபட்டினத்தைச் சோ்ந்த செய்யது அகமது என்பவரது தேங்காய் கிட்டங்கியில் திங்கள்கிழமை வேலை பாா்த்துவிட்டு கட்டட முதல் மாடியில் கைகழுவச்சென்றுள்ளாா். அங்கு தாழ்வாகச் சென்ற மின்கம்பியில் கைபட்டு, மின்சாரம் பாய்ந்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். திருப்புல்லாணி போலீஸாா் சடலத்தை மீட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனா். உயிரிழந்த கோவிந்தனுக்கு மனைவி, இரு குழந்தைகள் உள்ளனா். திருப்புல்லாணி போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்துவருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com