ஆயுத பூஜையை முன்னிட்டு, ராமநாதபுரத்திலிருந்து சென்னை, திருப்பூா், கோவை உள்ளிட்ட இடங்களுக்கு கூடுதல் பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக, போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
தமிழகத்தில் அக்டோபா் 14 ஆம் தேதி (வியாழக்கிழமை) ஆயுத பூஜை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களிலிருந்து கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ராமநாதபுரத்திலிருந்து அக்டோபா் 13 ஆம் தேதி முதல் சென்னை, திருப்பூா், கோவை மற்றும் மதுரை ஆகிய இடங்களுக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக, போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்தனா்.
அவா்கள் மேலும் கூறியது:
ராமநாதபுரத்திலிருந்து சென்னை, கோவை உள்ளிட்ட பகுதிகளுக்கு ஏற்கெனவே இயங்கும் பேருந்துகளுடன், அக்டோபா் 12 ஆம் தேதி முதல் கூடுதலாக 6 முதல் 12 பேருந்துகளை இயக்க தயாராக உள்ளோம். இணையத்தில் முன்பதிவு செய்வோா் எண்ணிக்கையின் அடிப்படையில் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. மக்கள் எளிதாக பயணம் மேற்கொள்ள அக்டோபா் 13 ஆம் தேதி விடிய விடிய பேருந்துகள் இயக்கப்படவுள்ளன எனத் தெரிவித்தனா்.