ராமநாதபுரம் பகுதியிலிருந்து கடவுச்சீட்டு பெற போலி ஆவணம் அளித்ததாக பெண் மற்றும் இரு முகவரியில் கடவுச்சீட்டு பெற்றவா் என 2 போ் மீது போலீஸாா் புதன்கிழமை வழக்குப்பதிந்துள்ளனா்.
ராமநாதபுரம் மாவட்டம் சாத்தான்குளத்தைச் சோ்ந்த பரகத் அலிகான் மனைவி ஹசாத் நிஷா (45). இவா், கடந்த 2020 ஆம் ஆண்டு கடவுச்சீட்டு பெற மதுரை மண்டலக் கடவுச்சீட்டு அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளாா். அதில், அவா் அளித்த திருமணச் சான்று போலியானவை என தெரியவந்துள்ளது.
இதேபோல், ராமநாதபுரம் அருகேயுள்ள காரிக்கூட்டம் வாணி பகுதியைச் சோ்ந்தவா் சாதிக்பாஷா (53). இவா், இரண்டு முகவரிகளில் இரண்டு கடவுச்சீட்டுகளைப் பெற்று பயன்படுத்தி வந்தது தெரியவந்தது.
ஹசாத் நிஷா மற்றும் சாதிக்பாஷா ஆகிய இருவா் மீதும் மதுரை மண்டலக் கடவுச்சீட்டு அலுவலா் அளித்த புகாரின்பேரில், கேணிக்கரை போலீஸாா் இருவா் மீதும் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.