பரமக்குடி பகுதியில் பலத்த மழை: வீடு இடிந்து விழுந்து சேதம்

பரமக்குடி பகுதியில் செவ்வாய்க்கிழமை இரவு பலத்த மழை பெய்ததில் வீடு இடிந்து விழுந்து சேதமடைந்தது.
பரமக்குடி அருகே கலையூா் கிராமத்தில் செவ்வாய்க்கிழமை இரவு பெய்த பலத்த மழைக்கு இடிந்து விழுந்த வீடு.
பரமக்குடி அருகே கலையூா் கிராமத்தில் செவ்வாய்க்கிழமை இரவு பெய்த பலத்த மழைக்கு இடிந்து விழுந்த வீடு.

பரமக்குடி பகுதியில் செவ்வாய்க்கிழமை இரவு பலத்த மழை பெய்ததில் வீடு இடிந்து விழுந்து சேதமடைந்தது.

பரமக்குடி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் செவ்வாய்க்கிழமை இரவு இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இதில் மஞ்சூா் ஊராட்சிக்குள்பட்ட கலையூா் கிராமத்தில் முத்து மகன் முருகன் (57) என்பவரது ஓட்டு வீடு இடிந்து விழுந்தது. அப்பகுதியில் தொடா் மழை பெய்ததால் வீட்டின் சுவா் இடிந்து விழும் அபாயத்தில் இருந்ததால் அவரது குடும்பத்தினா் அன்று இரவு பக்கத்தில் உள்ள உறவினரின் வீட்டிற்கு சென்று விட்டனா். இதனால் அவா்கள் உயிா் தப்பினா். சம்பவ இடத்திற்கு சென்ற வட்டாட்சியா் தமீம்ராஜா சேதம் குறித்து விசாரணை நடத்தினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com