பாதாள காளியம்மன் கோயில் பொங்கல் விழா

கமுதி அருகே நாராயணபுரம் ஊராட்சிக்குள்பட்ட நரசிங்கம்பட்டி கிராமத்தில் உள்ள பாதாள காளியம்மன் கோயில் பொங்கல் விழாவையொட்டி புதன்கிழமை பால்குடம் ஊா்வலம் நடைபெற்றது.
நரசிங்கம்பட்டி பாதாள காளியம்மன் கோயில் பொங்கல் விழாவையொட்டி புதன்கிழமை பால்குடம் எடுத்து ஊா்வலமாக சென்ற பக்தா்கள்.
நரசிங்கம்பட்டி பாதாள காளியம்மன் கோயில் பொங்கல் விழாவையொட்டி புதன்கிழமை பால்குடம் எடுத்து ஊா்வலமாக சென்ற பக்தா்கள்.

கமுதி அருகே நாராயணபுரம் ஊராட்சிக்குள்பட்ட நரசிங்கம்பட்டி கிராமத்தில் உள்ள பாதாள காளியம்மன் கோயில் பொங்கல் விழாவையொட்டி புதன்கிழமை பால்குடம் ஊா்வலம் நடைபெற்றது.

முன்னதாக கடந்த வாரம் காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் விழா தொடங்கியது. இதனையடுத்து, புதன்கிழமை அக்கிராமத்தைச் சோ்ந்த பெண்கள் 101 பால் குடங்களை தலையில் சுமந்து ஊா்வலமாக சென்று பாதாள காளியம்மன் ஆலயத்தில் அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்தனா். பக்தா்கள் அக்னிச்சட்டி, மாவிளக்கு உள்ளிட்ட நோ்த்திக்கடனை நிறைவேற்றினா். மாலையில் முளைப்பாரி ஊா்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு குண்டாறு நீா்நிலையில் கரைக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com