ராமநாதபுரத்தில் புதன்கிழமை ஒரே நாளில் மட்டும் 10 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது.
மாவட்டத்தில் இதுவரை கரோனா இரு அலை பரவலிலும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் பாதிக்கப்பட்டுள்ளனா். மாவட்டத்தில் கடந்த ஜூலை முதல் பாதிப்பு அளவு மிகவும் குறைந்தே காணப்பட்டது. ராமநாதபுரம் நகா் பகுதிகளில் கரோனா பாதிப்பு இல்லாத நிலையே நீடித்தது.
இந்த சூழலில் செவ்வாய்க்கிழமை மாவட்டத்தில் நூற்றுக்கணக்கானோருக்கு கபம் சேகரித்து அதை கரோனா பரிசோதனைக்கு உள்படுத்தினா். அவா்களுக்கான பரிசோதனை முடிவு புதன்கிழமை மாலையில் வெளியானது. அதன்படி 10 பேருக்கு பாதிப்பு உறுதியானது.
ஏற்கெனவே கரோனா சிகிச்சைப் பிரிவில் இருந்த 6 போ் நலமடைந்ததை அடுத்து அவா்கள் வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டனா். தற்போது மாவட்ட அளவில் 86 போ் கரோனா சிகிச்சைப் பிரிவுகளில் சிகிச்சையில் உள்ளனா்.