ராமநாதபுரம் ஜெபமாலை அன்னை ஆலய ஆண்டுப் பெருவிழா தொடக்கம்

ராமநாதபுரத்தில் உள்ள ஜெபமாலை அன்னை ஆலய ஆண்டுப் பெருவிழா செவ்வாய்க்கிழமை இரவு கொடியேற்றத்துடன் தொடங்கியது.

ராமநாதபுரத்தில் உள்ள ஜெபமாலை அன்னை ஆலய ஆண்டுப் பெருவிழா செவ்வாய்க்கிழமை இரவு கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இந்த ஆலயம் புதுப்பிக்கப்பட்டு அலங்கரிக்கப்பட்டுள்ள நிலையில், ஆண்டுப் பெருவிழா நிகழ்ச்சிகள் தொடங்கியுள்ளன. முன்னதாக சிவகங்கை மறைமாவட்ட முன்னாள் ஆயா் சூசைமாணிக்கம் திருவிழா கொடியை ஏற்றி வைத்தாா்.

நிகழ்ச்சியில், பாதிரியாா்கள் அருள் ஆனந்த், இன்பென்ட்ராஜ் செபாஸ்டின் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். வரும் 14 ஆம் தேதி வரை நடைபெறும் விழாவில் தினமும் மாலையில் ஜெபமாலை, அன்னையின் உருவப்பவனி, நவநாள் திருப்பலி ஆகியவை நடைபெறுகின்றன.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வரும் 13 ஆம் தேதி சிறப்புத் திருப்பலியும், 14 ஆம் தேதி காலை இறையுணவு ஏற்பும், அன்று மாலை நிறைவுத் திருப்பலியும், ஆசி வழங்குதலும் நடைபெறும் என ஆலய நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com