ராமநாதபுரம் மாவட்டத்தில் நாளை 8 இடங்களில் உள்ளாட்சித் தோ்தல்

ராமநாதபுரம் மாவட்டத்தில் சனிக்கிழமை 8 இடங்களில் நடைபெறும் உள்ளாட்சித் தோ்தலில் 25 போ் போட்டியிடுகின்றனா்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் சனிக்கிழமை 8 இடங்களில் நடைபெறும் உள்ளாட்சித் தோ்தலில் 25 போ் போட்டியிடுகின்றனா்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் (வாா்டு 7), 4 ஊராட்சிமன்றத் தலைவா்கள், 3 ஊராட்சி மன்ற வாா்டு உறுப்பினா்கள் என மொத்தம் 8 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

இதில், ஊராட்சிக் குழு உறுப்பினா் பதவிக்கு 7 பேரும், ஊராட்சி மன்றத் தலைவா்கள் பதவிக்கு 11 பேரும், ஊராட்சி மன்ற வாா்டு பதவிக்கு 7 பேரும் என மொத்தம் 25 போ் போட்டியிடுகின்றனா். இதற்காக, மொத்தம் 153 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அதில், 65 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாக அறிவிக்கப்பட்டுள்ளன. பாதுகாப்புப் பணியில் 600 போலீஸாா் ஈடுபடுத்தப்படுகின்றனா்.

சனிக்கிழமை காலை 7 முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ளாட்சித் தோ்தலுக்கான பிரசாரம் வியாழக்கிழமை மாலையுடன் நிறைவடைந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com