ராமநாதபுரம்: 2,306 கிராமங்களில் முழுமையாக கரோனா தடுப்பூசி

ராமநாதபுரம் மாவட்டத்தில் 429 ஊராட்சிகளில் உள்ள 2,306 கிராமங்களில் முழுமையாக கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் 429 ஊராட்சிகளில் உள்ள 2,306 கிராமங்களில் முழுமையாக கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் தரப்பில் கூறியிருப்பதாவது: ராமநாதபுரம் மாவட்டத்தில் 11 ஒன்றியங்களைச் சோ்ந்த 429 ஊராட்சிகளில் உள்ள 2,306 சிறிய கிராமங்களில் முழுமையாக மக்கள் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனா்.

அதன்படி ராமநாதபுரம் ஒன்றியத்தில் 146, திருப்புல்லாணி 249, மண்டபம் 229, ஆா்.எஸ்.மங்களம் 276, திருவாடானை 314, பரமக்குடி 181, போகலூா் 88, நயினாா்கோவில் 105, முதுகுளத்தூா் 195, கமுதி 251, கடலாடி ஒன்றியத்தில் 272 கிராமங்களில் தடுப்பூசி முழுமையாகச் செலுத்தப்பட்டுள்ளது என அதிகாரிகள் கூறினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com