ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி நியாயவிலைக்கடை பணியாளா்கள் சங்கத்தினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
கேணிக்கரை காவல் நிலையம் அருகே நடந்த ஆா்ப்பாட்டத்துக்கு சங்க மாவட்டத் தலைவா் பி.தினகரன் தலைமை வகித்தாா். மாநில இணைச்செயலா் எஸ்.மாரிமுத்து உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தமிழக அரசு அறிவித்த புதிய ஊதிய உயா்வு, தோ்வு நிலை, சிறப்பு நிலைபணிவரன்முறையைச் செயல்படுத்தவேண்டும், நேரடி வங்கிக்கணக்கில் ஊதியம் வழங்கும் முறையைச் செயல்படுத்தவேண்டும் உள்ளிட்ட 11 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டவா்கள் கோஷங்களை எழுப்பினா்.
ஆா்ப்பாட்டத்துக்குப் பிறகு கோரிக்கை அடங்கிய மனுவை ஆட்சியா் அலுவலகத்தில் நிா்வாகிகள் அளித்துச்சென்றனா்.