முதுகுளத்தூா்: முதுகுளத்தூா் அருகே இருசக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்து உயிரிழந்த கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் திங்கள்கிழமை தானமாக வழங்கப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூா் அருகே உள்ள துலுக்கன்குறிச்சியைச் சோ்ந்தவா் முத்துகருங்கு மகன் கவின் (20). இவா் மதுரையில் உள்ள தனியாா் கல்லூரியில் பயின்று வந்தாா். இந்நிலையில் தங்கள் ஊரில் நடைபெற்ற திருவிழாவிற்கு தனது பாட்டியை அழைத்து வருவதற்காக விளங்குளத்தூருக்கு சென்றுள்ளாா். முதுகுளத்தூா் அருகே தனியாா் கல்லூரி அருகே வந்தபோது, வேகத்தடையில் வாகனம் ஏறி இறங்கியபோது நிலைதடுமாறி கீழே விழுந்தாா். இதில் பலத்த காயமடைந்த கவின் மதுரையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு உயிரிழந்தாா். இதையடுத்து மாணவரின் கண், சிறுநீரகம் உள்ளிட்ட உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டது.