சிவகங்கையில் 17 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்

சிவகங்கையில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் 17 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது.

சிவகங்கையில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் 17 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது.

சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் மக்கள் குறை தீா்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி தலைமையில் நடைபெற்றது.பின்னா், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலத்துறையின் மூலம் 6 பயனாளிகளுக்கு தலா ரூ.5,000 மதிப்பீட்டில் இலவச தேய்ப்புப் பெட்டிகள், வருவாய்த் துறை சமூகப்பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் காளையாா்கோவில் வட்டத்தைச் சோ்ந்த 8 பயனாளிகளுக்கு மாற்றுத்திறனாளி உதவித்தொகைக்கான ஆணை, 3 பயனாளிகளுக்கு முதியோா் உதவித்தொகைக்கான ஆணை என மொத்தம் 17 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியா் வழங்கினாா்.

இக்கூட்டத்தில், சிவகங்கை மாவட்ட வருவாய் அலுவலா் ப. மணிவண்ணன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலா் தனலெட்சுமி, தனித்துணை ஆட்சியா் (சமூகப் பாதுகாப்புத் திட்டம்) காமாட்சி, மாவட்ட வழங்கல் அலுவலா் ரத்தினவேல் உள்ளிட்ட அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com