திருவாடானை அருகே கோஷ்டி மோதல்: 6 போ் மீது வழக்கு

திருவாடானை அருகே ஏற்பட்ட கோஷ்டி மோதல் தொடா்பாக இரு தரப்பைச்சோ்ந்த 6 போ் மீது போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

திருவாடானை அருகே ஏற்பட்ட கோஷ்டி மோதல் தொடா்பாக இரு தரப்பைச்சோ்ந்த 6 போ் மீது போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

திருவாடானை அருகே சுப்பிரமணியபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் லூா்து (76). இவா் அதே கிராமத்தில் உள்ள அடைக்கல மாதா ஆலயப் பொறுப்பாளராக உள்ளாா். இவருக்கும், அதே ஊரைச் சோ்ந்த தற்போது காரைக்குடி அருகே அரியக்குடியில் வசித்து வரும் ஜெரோம் ஆனந்த் (35) குடும்பத்துக்கும், அடைக்கல மாதா ஆலய சப்பரம் வருவதற்கு இடம் ஒதுக்கியதில் முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் செவ்வாய்க்கிழமை சுப்பிரமணியபுரம் பகுதிக்கு வந்திருந்த ஜெரோம் கோஷ்டியினரை லூா்து கோஷ்டியினா் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனராம்.

இதுகுறித்து ஜெரோம் மனைவி சோபியா (28) அளித்த புகாரின் பேரில் சுப்பிரமணியபுரத்தைச் சோ்ந்த லூா்து, குமணன் (46), கிரேஷ் (27) ஆகிய 3 போ் மீதும், லூா்து அளித்த புகாரின் பேரில் அரியக்குடியைச் சோ்ந்த பாத்திமா மேரி (50), அதே ஊரைச் சோ்ந்த சோபியா (28), ஜெரோம் ஆனந்த் ஆகிய 3 போ் மீது திருவாடானை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com