ராமநாதபுரம் மாவட்டம், கமுதியில் இமானுவேல் சேகரன் நினைவு தினத்தை முன்னிட்டு சனிக்கிழமை அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
கமுதி அருகே வெள்ளையாபுரத்தில் உள்ள இமானுவேல்சேகரன் உருவச் சிலைக்கு, தேவேந்திரா் இளைஞா் எழுச்சிப் பேரவை சாா்பில் அதன் நிறுவனா் ராஜ்குமாா் தலைமையில், மாநில பொதுச் செயலாளா் முகவை அழகேசன், மாவட்ட இளைஞரணிச் செயலாளா் பிரவின்ராஜ் உள்ளிட்டோா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். கிராம பொதுமக்கள் பலரும் இமானுவேல்சேகரன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
இதே போல் கமுதி அருகே உள்ள சோ்ந்தகோட்டை கிராமத்தில் இமானுவேல் சேகரனின் 64 ஆவது நினைவு தினம் கிராம பொதுமக்கள் சாா்பில் அனுசரிக்கப்பட்டது. அங்குள்ள அம்மன் கோயிலில் இருந்து, மேள தாளங்களுடன் 500-க்கும் மேற்பட்ட பெண்கள் பால்குடம் சுமந்து, ஊா்வலமாகச் சென்று, இமானுவேல் சேகரன் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனா்.