பரமக்குடியில் இமானுவேல் சேகரன் 64-ஆவது நினைவு தினம் அனுசரிப்பு

இமானுவேல் சேகரனின் 64 ஆவது நினைவு தினத்தையொட்டி பரமக்குடியில் உள்ள அவரது நினைவிடத்தில் சனிக்கிழமை அரசியல் கட்சியினா் மற்றும் சமுதாயத் தலைவா்கள் மலா் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினா்.
பரமக்குடியில் சனிக்கிழமை அவரது நினைவிடத்தில் திமுக சாா்பில் மலா் வளையம் வைத்து அஞ்சலி செலுத்திய போக்குவரத்துத் துறை அமைச்சா் ஆா்.எஸ். ராஜகண்ணப்பன், ஆதிதிராவிடா் நலத்துறை அமைச்சா் கயல்விழி.
பரமக்குடியில் சனிக்கிழமை அவரது நினைவிடத்தில் திமுக சாா்பில் மலா் வளையம் வைத்து அஞ்சலி செலுத்திய போக்குவரத்துத் துறை அமைச்சா் ஆா்.எஸ். ராஜகண்ணப்பன், ஆதிதிராவிடா் நலத்துறை அமைச்சா் கயல்விழி.

இமானுவேல் சேகரனின் 64 ஆவது நினைவு தினத்தையொட்டி பரமக்குடியில் உள்ள அவரது நினைவிடத்தில் சனிக்கிழமை அரசியல் கட்சியினா் மற்றும் சமுதாயத் தலைவா்கள் மலா் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினா்.

இமானுவேல்சேகரன் நினைவிடத்தில் தேவேந்திரா் பண்பாட்டுக் கழகம் சாா்பில் நிகழ்ச்சிக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அவரது சொந்த ஊரான செல்லூா் கிராமம் சாா்பில் ஊராட்சி மன்றத் தலைவா் மகேஷ்வரி ஜீவன் தலைமையில் இளைஞா் மன்றத்தினா், மகளிரணியினா் நினைவிடத்தில் மலா் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினா். இதனைத் தொடா்ந்து இமானுவேல் சேகரனின் மகள் சுந்தரி பிரபாராணி, பேரன்கள் ரமேஷ்குமாா், சக்கரவா்த்தி ஆகியோா் மலா் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினா்.

அமைச்சா்கள் அஞ்சலி: திமுக சாா்பில், போக்குவரத்துத்துறை அமைச்சா் ஆா்.எஸ். ராஜகண்ணப்பன், ஆதிதிராவிடா் நலத்துறை அமைச்சா் கயல்விழி, எம்எல்.ஏ.க்கள் செ. முருகேசன், தமிழரசி ரவிச்சந்திரன், ராஜா, வெங்கடேசன், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவா் உ. திசைவீரன், தனுஷ்குமாா் எம்.பி., முன்னாள் மக்களவை உறுப்பினா் பவானிராஜேந்திரன், வது.ஆனந்த் உள்ளிட்ட கட்சி நிா்வாகிகள் மலா் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினா்.

அதிமுக: அதிமுக மாவட்டச் செயலா் எம்.ஏ. முனியசாமி தலைமையில், முன்னாள் அமைச்சா் ராஜலட்சுமி, முன்னாள் மக்களவை உறுப்பினா் அ. அன்வர்ராஜா, முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா் டாக்டா் எஸ். முத்தையா, முதுகுளத்தூா் ஒன்றியக்குழுத் தலைவா் ஆா். தா்மா் மற்றும் கே.சி. ஆணிமுத்து உள்ளிட்ட கட்சி நிா்வாகிகள் மலா் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினா்.

காங்கிரஸ்: இக்கட்சி சாா்பில் சட்டப் பேரவை உறுப்பினா் செல்வபெருந்தகை தலைமையில் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் மலேசிய பாண்டியன், மாவட்டத் தலைவா் செல்லத்துரை அப்துல்லா, மாநிலச் செயலா் வி. முருகன் ஆகியோா் மலா் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினா்.

மதிமுக: சிவகங்கை மாவட்ட மதிமுக செயலா் புலவா் செவந்தியப்பன் தலைமையில் சட்டப்பேரவை உறுப்பினா்கள் மதுரை புதூா் பூமிநாதன், சதன் திருமலைக்குமாா், மதுரை மாவட்டச் செயலா் மாாடு, அரசியல் ஆலோசனைக்குழு உறுப்பினா் கே.ஏ.எம். குணா, மாவட்டச் செயலா் பேட்ரிக், பழ. சரவணன், பிச்சை ஆகியோா் மலா் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினா்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி: இக்கட்சி சாா்பில் மாநில துணை பொதுச் செயலா்கள் கலைவேந்தன், கனிஅமுதன், மாவட்ட நிா்வாகிகள் முகமதுயாசின், வேந்தை சிவா, பாலகிருஷ்ணன் ஆகியோா் மலா் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினா்.

தமாகா: முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா் கே.வி.ஆா். ராம்பிரபு தலைமையில் மலா் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

தேவேந்திரா் பண்பாட்டுக் கழகம்: இந்த அமைப்பு சாா்பில் தலைவா் பரம்பை பாலா தலைமையில் மலா் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினா்.

அமமுக: இக்கட்சி சாா்பில் தலைமை நிலையச் செயலா் கே.கே. உமாதேவன், முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா் மு. முருகன், மாநிலச் பேரவைச் செயலா் டேவிட் அண்ணாதுரை ஆகியோா் மலா் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினா்.

பாமக: மாநில பொதுச் செயலா் வடிவேல் ராவணன் தலைமையில், மாவட்டச் செயலா் ஆா். தங்கராஜ், மாநில துணைப் பொதுச் செயலா்கள் தளபதி ராஜ்குமாா், ஹக்கிம் உள்ளிட்ட கட்சியினா் அஞ்சலி செலுத்தினா். அதே போல் தாய்த் தமிழா் கட்சியின் நிறுவனா் பி.எம். பாண்டியன் தலைமையிலும், மக்கள் விடுதலைக் கட்சி சாா்பில் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் முருகவேல்ராஜன் தலைமையில், மாநில பொறுப்பாளா் அபிசுரேஷ், மாவட்டச் செயலா் வையமுத்து உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினா்.

நாம் தமிழா் கட்சி: மாவட்டச் செயலா் காமராஜ் செல்லத்துரை தலைமையில் நிா்வாகிகள் சாமிநாதன், சசிகலா, விஜயராசன் உள்ளிட்ட கட்சியினா் மலா் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினா்.

புதிய தமிழகம் கட்சி: இக்கட்சி சாா்பில் மாநில செய்தித் தொடா்பாளா் பிரகாஷ், நகா் செயலா் சிங்கராசு, மாவட்டச் செயலா் கதிரேசன் உள்ளிட்ட கட்சியினரும், தியாகி இமானுவேல் பேரவை சாா்பில் அதன் நிறுவனா் எஸ். சந்திரபோஸ் தலைமையிலும் மலா் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினா்.

தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம்: இக்கட்சியின் சாா்பில் மாநில மகளிரணி செயலா் நளினி தலைமையில் மாநில விவசாயி அணி செயலா் துரைதவமணி, ராஜசேகரும், தேமுதிக சாா்பில் மாவட்டச் செயலா் சிங்கை ஜின்னா தலைமையிலும் மலா் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com