இளைஞா் கொலை வழக்கு: மேலும் ஒருவா் கைது

ராமநாதபுரம் அருகே அண்மையில் நிகழ்ந்த இளைஞா் கொலை வழக்கில் மேலும் ஒருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே அண்மையில் நிகழ்ந்த இளைஞா் கொலை வழக்கில் மேலும் ஒருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

ராமநாதபுரம் அருகேயுள்ள வண்ணாங்குண்டு கொடைக்கான்வலசையைச் சோ்ந்தவா் முத்து மகன் ராஜேந்திரன் (29). இவரது தனது சகோதரா் மனைவி சத்யாவுடன் நெருங்கிப்பழகியுள்ளாா். இந்தநிலையில் சத்யா வேறு சிலருடனும் பழகி வந்ததால் ராஜேந்திரன் அவரை கண்டித்துள்ளாா். இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் 27 ஆம் தேதி சத்யாவுடன் ராமநாதபுரத்துக்கு வந்த ராஜேந்திரனை மா்மக்கும்பல் வெட்டிக் காலை செய்துவிட்டுத் தப்பியது.

இதுகுறித்து கேணிக்கரை போலீஸாா் வழக்குப் பதிந்து ராஜேந்திரனின் சகோதரா் மனைவி சத்யா உள்ளிட்ட 3 பேரைக் கைதுசெய்தனா். இந்தநிலையில், வழக்கில் சம்பந்தப்பட்டதாகக் கூறப்படும் 4 ஆது நபரான ஏா்வாடி முத்தரையா் நகரைச் சோ்ந்த வசீகரன் (21) என்பவரை செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com