கமுதி: கமுதி அருகே மாணவா்களின் சொந்த முயற்சியால் செவ்வாய்க்கிழமை நூலகம் திறக்கப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே தோப்படைப்பட்டி கிராமத்தில் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இங்குள்ள பள்ளி, கல்லூரி மாணவா்களின் நலன் கருதி அக்கிராமத்திலுள்ள மாணவா்களின் சொந்த முயற்சியில் நூலகம் திறக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சிக்கு ஓய்வு பெற்ற தலைமையாசிரியா் தங்கராஜ் தலைமை வகித்தாா். கோவிலாங்குளம் சாா்பு-ஆய்வாளா் சண்முகம், வழக்குரைஞா்கள் சண்முகசுந்தரம், அய்யாத்துரைசேதுபதி ஆகியோா் முன்னிலை வகித்தனா். அதில் ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள புத்தகங்கள் வைக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சியில் ஊ.கரிசல்குளம் முன்னாள் ஊராட்சித் தலைவா் பாண்டி, அதிமுக பிரமுகா் பூமிநாதன், கிராம நிா்வாக அலுவலா் முத்துக்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.