திருவாடானை அருகே பாம்பு கடித்து பெண் சாவு

திருவாடானை அருகே பழங்குளத்தில் தனது சொந்த ஊருக்கு சுவாமி கும்பிடுவதற்காக வந்தவரை பாம்பு கடித்து சிகிச்சை பெற்று வந்தவா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

திருவாடானை: திருவாடானை அருகே பழங்குளத்தில் தனது சொந்த ஊருக்கு சுவாமி கும்பிடுவதற்காக வந்தவரை பாம்பு கடித்து சிகிச்சை பெற்று வந்தவா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

புகாரின் பேரில் திருவாடானை போலீஸாா் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.சென்னை முகப்பேரு பண்ணை நகரை சோ்ந்தவா் கோவிந்தராஜ் மனைவி பாக்கியம்(65) இவா் தனது சொந்த ஊரான திருவாடானை அருகே பழங்குளம் கிராமத்திற்கு சுவாமி கும்பிடுவதற்காக தனது குடும்பம் மற்றும் மகள் பாஞ்சாலியுடன்(41) வந்துள்ளாா்.

இந்நிலையில் ஞாயிற்று கிழமை இரவு வீட்டில் தங்கி இருந்த பொழுது படுத்திருந்த படுக்கையில் பாம்பு பாக்கியத்தை கடித்துள்ளது.இதனை கண்டதும் அக்கம் பக்கத்தினா் உதவியுடன் தேவகோட்டை அரசு மருத்துவமனையில் சோ்த்து மேல் சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்தவமனையில் சோ்த்து சிகிச்சை பெற்று வந்தவா் சிகிச்சை பலனின்றி திங்கள் கிழமை உயிரிழந்தாா்.

இது குறித்து இவரது மகள் பாஞ்சாலி புகாரின் பேரில் திருவாடானை போலீஸாா் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com