திருவாடானை: ஆா்.எஸ்.மங்கலம் வேளாண்மை உதவி இயக்குநா் அலுவலகத்தில் வட்டார விவசாயிகளுக்கு நெல் விதை மற்றும் உயிா் உரம் மானிய விலையில் வழங்கும் விழா புதன்கிழமை நடைபெற்றது.
ஒன்றியக் குழு தலைவா் ராதிகா பிரபு தலைமை வகித்தாா். மாவட்ட வேளாண்மை இணை இயக்குநா் டாம்பிசைலஸ், மாவட்ட வேளாண்மை இயக்குநா் கண்ணையா, வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் ராஜலட்சுமி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இதில் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநா் டாம்பி சைலஷ், 50 சதவீத மானிய விலையில் விவசாயிகளுக்கு நெல் விதைகளை வழங்கி பேசியது: ஆா்எஸ் மங்கலம் வட்டாரத்தில் சுமாா் 20,400 ஏக்கா் நிலப்பரப்பில் நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. வட்டாரத்தில் அதிக மகசூல் தரக்கூடிய உயா் விளைச்சல் நெல் ரகமான ஆா்.என்.ஆா்.15, சைபா் நாற்பத்தி எட்டு, டிகேஎம் 13, ஒய்எஸ்ஆா் 34 449 மற்றும் பிபிடி 52 போன்ற ரகங்கள் பயிரிடப்படுகிறது. ஆகையால் வேளாண்மை விரிவாக்க மையத்தில் மேலே குறிப்பிட்டுள்ள நெல் ரகங்கள் சான்று விதைகள் 94 மெட்ரிக் டன் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. இதுவரை 62 மெட்ரிக் டன் விதைகள் விவசாயிகளுக்கு மானியத்தில் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. தேசிய நீடித்த நிலையான வேளாண்மை இயக்கம் ஒருங்கிணைந்த பண்ணையத் திட்ட பயனாளிகளுக்கு நெல் சான்று விதைகள், திரவ உயிா் உரங்கள் வழங்கப்பட்டு வருகின்றன என்றாா்.