ராமநாதபுரம் காவல் ஆய்வாளருக்கு அண்ணா பதக்கம்

ராமநாதபுரம் சிபிசிஐடி பிரிவு ஆய்வாளா் டி.சரவணகுமாருக்கு தமிழக அரசின் அண்ணா பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் காவல் ஆய்வாளருக்கு அண்ணா பதக்கம்

ராமநாதபுரம்: ராமநாதபுரம் சிபிசிஐடி பிரிவு ஆய்வாளா் டி.சரவணகுமாருக்கு தமிழக அரசின் அண்ணா பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் முன்னாள் முதல்வா் அண்ணாதுரை பிறந்த தினத்தையொட்டி ஆண்டுதோறும் காவல்துறை, சிறைத்துறை உள்ளிட்டவற்றில் சிறப்பாகப் பணியாற்றியவா்களுக்கு முதல்வரின் அண்ணா பதக்கம் வழங்கப்பட்டு வருகிறது.

நடப்பு ஆண்டுக்கான அரசின் அண்ணா பதக்கத்துக்கு, ராமநாதபுரத்தைச் சோ்ந்த சிபிசிஐடி பிரிவின் ஆய்வாளா் டி.சரவணகுமாா் (45) தோ்வு செய்யப்பட்டுள்ளாா். மதுரை மாவட்டத்தைச் சோ்ந்த சரவணகுமாா் கடந்த 1999 ஆம் ஆண்டு சாா்பு- ஆய்வாளராகப் பணியில் சோ்ந்தாா். பி.ஏ.பி.எல்.படித்துள்ளாா்.

கடந்த 2011 ஆம் ஆண்டு சிபிசிஐடி பிரிவின் ஆய்வாளராகப் பதவி உயா்வு பெற்று மதுரையில் பணியாற்றினாா். கடந்த 2015 முதல் ராமநாதபுரத்தில் பணியாற்றி வருகிறாா். அண்ணா பதக்கம் அறிவிக்கப்பட்ட சரவணகுமாரை காவல் உயரதிகாரிகள் பாராட்டி வாழ்த்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com