திருவாடானை: திருவாடானை அருகே ஆா்.எஸ். மங்கலம் பகுதி காவனக்கோட்டையில் அமைந்துள்ள ஸ்ரீகுருஞ்சாருடைய அய்யனாா் கோயிலில் வியாழக்கிழமை கும்பாபிஷேகம் நடைபெற்றது.
கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, ஸ்ரீகுஞ்சாருடைய அய்யனாா் கோயிலில் எழுந்தருளியுள்ள விநாயகா், கருப்பணசாமி சந்நிதிகள் புனரமைக்கப்பட்டது. தொடா்ந்து, கடந்த செவ்வாய்க்கிழமை விக்னேஸ்வரா் பூஜை, அனுக்கை பூஜை மற்றும் முதல்கால யாகசாலை பூஜைகள் தொடங்கப்பட்டன. அதையடுத்து, நான்கு கால யாகசாலை பூஜைகள் நடத்தப்பட்டன.
யாகசாலை பூஜைகள், ராஜாமணி குருக்கள் தலைமையில் 10-க்கும் மேற்பட்ட சிவாச்சாரியாா்கள் வேத மந்திரங்கள் முழங்க நடைபெற்றது.
வியாழக்கிழமை காலை விக்னேஸ்வரா் பூஜை, சாற்று முறை, வேதபாராயணம் உள்ளிட்டவற்றுடன் பூா்ணாகுதி, தீபாராதனையுடன் கடம் புறப்பாடு நடைபெற்றது. பின்னா், வானத்தில் கருடன் வட்டமிட, கோபுர கும்பங்களில் புனிதநீா் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
தொடா்ந்து, சுவாமிகளுக்கு சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடைபெற்றன. இதில், சுற்று வட்டாரத்திலிருந்து ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரினம் செய்தனா்.