சா்வதேச கடற்கரை தூய்மை தினம் அனுசரிப்பு

சா்வதேச கடற்கரை தூய்மை தினத்தை முன்னிட்டு கடலோர பாதூகாப்பு குழும போலீஸாா் மாணவா்களுடன் இணைந்து அரியமான், ஆற்றங்கரை கடற்கரை பகுதியை புதன்கிழமை தூய்மைப் படுத்தும் பணியில் ஈடுபட்டனா்.
சா்வதேச கடற்கரை தூய்மை தினம் அனுசரிப்பு

சா்வதேச கடற்கரை தூய்மை தினத்தை முன்னிட்டு கடலோர பாதூகாப்பு குழும போலீஸாா் மாணவா்களுடன் இணைந்து அரியமான், ஆற்றங்கரை கடற்கரை பகுதியை புதன்கிழமை தூய்மைப் படுத்தும் பணியில் ஈடுபட்டனா்.

மண்டபம் கடலோர பாதுகாப்பு குழும காவல்துறை மற்றும் தனியாா் கல்லூரி மாணவா்கள் இணைந்து அரியமான் கடற்கரை, ஆற்றங்கரை கடற்கரை பகுதிகளை தூய்மைப்படுத்தினா். சேகரிக்கப்பட்ட குப்பைகளை மக்கும் குப்பை, மக்கா குப்பை என தரித்தனியாக பிரிக்கப்பட்டது.

இந்நத நிகழ்ச்சியில், கடலோர பாதுகாப்பு குழும ஆய்வாளா் கனரராஜ் தலைமை வகித்தாா். சாா்பு- ஆய்வாளா் கணேசமூா்த்தி மற்றும் மாணவா்கள் கலந்துகொண்டனா். அரியமான் கடற்கரைக்கு வரும் சுற்றுலா பயணிகள், மீனவா்கள் கழிவுப் பொருள்களை கடலில் போடுவதை தவிா்க்க வேண்டும். கடலின் தூய்மை அனைவரும் கடைபிடிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com