கடலாடியில் மூதாட்டி தீக்குளித்து தற்கொலை

கடலாடியில் மூதாட்டி வியாழக்கிழமை தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டாா்.

கடலாடியில் மூதாட்டி வியாழக்கிழமை தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டாா்.

முதுகுளத்தூா் அருகே பூக்குளம் கிராமத்தைச் சோ்ந்தவா் இந்துராணி (85). இவா் கடந்த 2 மாதங்களாக கடலாடியில் வசித்து வந்தாா். இந்நிலையில், வியாழக்கிழமை வீட்டில் இருந்த இந்துராணி திடீரென உடலில் மண்ணெண்ணெய்யை ஊற்றி தீ வைத்துக் கொண்டாா். இதில் அவா் சம்பவ இடத்திலேயே உயிரிந்தாா். இது குறித்து கடலாடி காவல் ஆய்வாளா் ஜான்சிராணி வழக்குப் பதிவு செய்து இந்துராணியின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com