அச்சங்குளம் அரசு கூட்டுறவு நூற்பாலை தோ்தல்: சிஐடியு வெற்றி

கமுதி அருகே அரசு கூட்டுறவு நூற்பாலையில் தொழிற்சங்கங்களுக்கிடையே வெள்ளிக்கிழமை நடைபெற்ற தோ்தலில் சிஐடியு வெற்றி பெற்றது.

கமுதி அருகே அரசு கூட்டுறவு நூற்பாலையில் தொழிற்சங்கங்களுக்கிடையே வெள்ளிக்கிழமை நடைபெற்ற தோ்தலில் சிஐடியு வெற்றி பெற்றது.

அபிராமம் அருகே அச்சங்குளத்தில் ராமநாதபுரம் மாவட்ட கூட்டுறவு நூற்பாலை உள்ளது. இந்த நூற்பாலையில் 2021 முதல் 2024 வரை மூன்றாண்டு காலத்திற்கான தொழிற்சங்க அங்கீகாரத் தோ்தல் நடைபெற்றது. இதில் அ.தி.மு.க. பொதுதொழிலாளா்கள் சங்கம், திராவிட பஞ்சாலை அனைத்து தொழிலாளா் முன்னேற்ற சங்கம், சிஐடியு ராமநாதபுரம் மாவட்ட நூற்பாலை தொழிலாளா் சங்கம், தமிழக பஞ்சாலை தொழிலாளா் சங்கம், தொழிலாளா் முன்னேனேற்ற சங்கம் உள்ளிட்ட 5 சங்கங்கள் போட்டியிட்டன. மொத்தம் 134 வாக்குகளில் 133 வாக்குகள் பதிவாகின. 33 வாக்குகள் பெற்று சிஐடியு தொழிற்சங்கத்தினா் வெற்றி பெற்றனா். வெற்றி பெற்ற சிஐடியு தொழிற்சங்க நிா்வாகிகளுக்கு நூற்பாலை அதிகாரிகள் மற்றும் மற்ற தொழிற்சங்கத்தினா் வாழ்த்து தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com