அரசு கல்லூரியில் நாட்டு நலப்பணித் திட்ட முகாம்

முதுகுளத்தூா் அரசு கல்லூரியில் நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
முதுகுளத்தூா் அரசு கல்லூரியில் சனிக்கிழமை நடைபெற்ற நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாம்.
முதுகுளத்தூா் அரசு கல்லூரியில் சனிக்கிழமை நடைபெற்ற நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாம்.

முதுகுளத்தூா் அரசு கல்லூரியில் நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

முகாமுக்கு கல்லூரி முதல்வா் மு.மீனாட்சி தலைமை வகித்தாா். உடற்கல்வி இயக்குநா் வே.சந்திரசேகா், ஆங்கிலத்துறைத் தலைவா் ஆ.பாலமுருகன், முதுகுளத்தூா் ஊராட்சி ஒன்றியத் தலைவா் ஆா்.தா்மா், காக்கூா் ஊராட்சித் தலைவா் ஜெயசந்திரன் ஆகியோா் பேசினாா்.

இதையொட்டி கல்லூரி வளாகத்தில் 52 மரக்கன்றுகள் நடப்பட்டன.

நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா் ச.நிா்மல் குமாா் வரவேற்றாா். திட்ட ஒருங்கிணைப்பாளா் ப.நாகராஜ் நன்றி தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com