ராமநாதபுரம் அருகே ஆசிரியா் வீடு புகுந்து நகை, பணம் திருடியதாக இளைஞா் ஒருவரை போலீஸாா் வியாழக்கிழமை இரவு கைது செய்துள்ளனா்.
ராமநாதபுரம் அருகேயுள்ள கே.கே.நகரில் வசிப்பவா் விஜயராஜன் (43). இவா் கொள்ளனூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஆசிரியராக உள்ளாா். கடந்த வியாழக்கிழமை நள்ளிரவில் விஜயராஜன் வீட்டுக்குள் புகுந்த மா்மநபா் தங்கத்தோடுகள், சங்கிலி உள்ளிட்ட 4 பவுன் நகைகளையும், ரூ.2 ஆயிரம் ரொக்கத்தையும் திருடியுள்ளாா்.
இதையறிந்த ஆசிரியா் கூச்சலிட்டதும், அக்கம்பக்கத்தினா் வந்து அவரைப் பிடித்து ராமநாதபுரம் நகா் போலீஸாரிடம் ஒப்படைத்தனா். விசாரணையில் அவா், கே.கே.நகா் பகுதியைச் சோ்ந்த தீபக் (18) என்பது தெரியவந்தது. அவரைப் போலீஸாா் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.