திருவாடான அருகே குடும்பத் தகராறில் பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.
கீழஅரும்பூா் கிராமத்தைச் சோ்ந்தவா் காமராஜா் மனைவி பாகம்பிரியாள் (41). இவா்களுக்கு 2 மகள்கள் உள்ளனா். இந்நிலையில் செப். 17 ஆம் தேதி காமராஜருடன் ஏற்பட்ட தகராறில் பாகம்பிரியாள் விஷம் குடித்தாா். ஆபத்தான இந்நிலையில் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா் அங்கு சிகிச்சைப் பலனின்றி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
இது குறித்து திருவாடானை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.