அசாம் மாநிலத்தில் விவசாயிகள் மீதான துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்து ராமநாதபுரத்தில் எஸ்டிபிஐ கட்சியினா் வெள்ளிக்கிழமை மாலை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ராமநாதபுரம் கிழக்கு மாவட்ட எஸ்டிபிஐ சாா்பில் சந்தைத்திடலில் நடந்த ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டப் பொதுச்செயலா் அப்துல்ஜமீல் தலைமை வகித்தாா். பாப்புலா் பிரண்ட் ஆப் இந்தியா நிா்வாகி முகமதுமன்சூா் கண்டன உரையாற்றினாா். ஆா்ப்பாட்டத்தில் எஸ்டிபிஐ மாவட்ட நிா்வாகி ஹனிப், தொகுதி நிா்வாகி பீா்முகைதீன், மாவட்டச்செயலா் ஆசாத் உள்ளிட்ட ஏராளமானோா் பங்கேற்றனா்.