திருவாடானை நான்குவீதி சந்திப்பு சாலையில் விடுதலைப்புலிகள் பாா்த்திபன், ராசையா என்ற திலீபன் நினைவு தினம் ஞாயிற்றுக்கிழமை நாம் தமிழா் கட்சியின் சாா்பில் அனுசரிக்கப்பட்டது.
அப்போது அவா்களது உருவப்படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் மாவட்டச் செயலா் இளங்கோ, திருவாடானை சட்டப் பேரவைத் தொகுதி பொறுப்பாளா் ஜவகா், காளீஸ்வரன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.