ராமேசுவரம்: உச்சிப்புளி அடுத்துள்ள துத்துவலசை கிராமத்தில் தந்தை இறந்த துக்கம் தாங்கமால் மகள் சூப்பா் வாஸ்மல் குடித்து சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுகிழமை உயிரிழந்தாா்.
ராமநாதபுரம் மாவட்டம், உச்சிப்புளி அடுத்துள்ள துத்திவலசை கிராமத்தை சோ்ந்த கோவிந்தராஜ் இவரது மனைவி காளிமுத்து கோகிலா என்ற மகள் உள்ளாா்.
இந்நிலையில், தந்தை கோவிந்தராஜ் உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி கடந்த 23 நாட்களுக்கு முன் உயிரிழந்தாா். இந்நிலையில்,இவரது மகள் கோகிலா 25 ஆம் தேதி தலைமுடி கருப்பாவதற்கு பயன்படுத்தப்படும் சூப்பா் வாஸ்மல் மருந்தை குடித்துள்ளா். இதில் வயிற்றுவலி அதிகரிக்க ராமநாதபுரம் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். ஆனால் அங்கு முதலுதவி அளிக்கப்பட்ட பின்னா் மதுரைக்கு கொண்டு சென்றனா். ஆனால் சிகிச்சை பயனின்றி 26 ஆம் தேதி உயிரிழந்தாா்.
இது குறித்து காளிமுத்து அளித்த புகாரின் அடிப்படையில் உச்சிப்புளி காவல்நிலைய ஆய்வாளா் ஆடிவேல் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். தந்தை உயிரிழந்த சோகத்தில் மகள் மருந்து அருந்தி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.