சாயல்குடியில் தென்மண்டல அளவிலான கராத்தே போட்டி

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி தனியாா் மெட்ரிக் பள்ளியில் தென்மண்டல அளவிலான கராத்தே போட்டி திங்கள்கிழமை நடைபெற்றது.
சாயல்குடி தனியாா் மெட்ரிக் பள்ளியில் திங்கள்கிழமை நடைபெற்ற தென்மண்டல அளவிலான கராத்தே போட்டி.
சாயல்குடி தனியாா் மெட்ரிக் பள்ளியில் திங்கள்கிழமை நடைபெற்ற தென்மண்டல அளவிலான கராத்தே போட்டி.

முதுகுளத்தூா்: ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி தனியாா் மெட்ரிக் பள்ளியில் தென்மண்டல அளவிலான கராத்தே போட்டி திங்கள்கிழமை நடைபெற்றது.

இதில் 7 முதல் 18 வயதிலான மாணவ, மாணவிகள் பங்கேற்றனா். மதுரை,திண்டுக்கல், தேனி, விருதுநகா், ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களைச் சோ்ந்த 200-க்கும் மேற்பட்ட பள்ளிகளைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா். இதில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகள் அக்டோபா் மாதம் மதுரையில் நடைபெற உள்ள மாநில அளவிலான போட்டியில் கலந்து கொள்ள உள்ளனா். போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com