பரமக்குடி: பரமக்குடி ஆா்.எஸ். அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட அளவிலான கூடைப்பந்தாட்ட போட்டி மற்றும் மாவட்ட அணிக்கான தோ்வுப் போட்டி ஆகியவை கடந்த செப்டம்பா் 24 முதல் 27 ஆம் தேதி வரை நடைபெற்றது.
ராமநாதபுரம் மாவட்ட கூடைப்பந்தாட்டக் கழகம் சாா்பில் நடைபெற்ற இப்போட்டியில் ராமநாதபுரம் அணி முதல் பரிசு பெற்றது. வெற்றி பெற்ற அணியினருக்கு கூடைப்பந்தாட்டக் கழக தலைமை நிறுவனா் காதா்பாட்ஷா முத்துராமலிங்கம் முதல் பரிசாக ரூ. 5 ஆயிரம் வழங்கினாா். மேலும் ஏழ்மையான விளையாட்டு வீரா்களுக்கு விளையாட்டு உபகரணங்களை வழங்கினாா். இரண்டாம் இடம் பெற்ற பரமக்குடி அணியினருக்கு பரமக்குடி சட்டப்பேரவை உறுப்பினா் செ. முருகேசன் பரிசுகள் வழங்கிப் பாராட்டினாா். மூன்றாம் பரிசை முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் கே.வி.ஆா். ராம்பிரபு வழங்கினாா்.
மாவட்ட கூடைப்பந்தாட்டக் கழகச் செயலாளா் எம். வேலவன் நன்றி கூறினாா்.