முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை ராமநாதபுரம்
கமுதி அருகே வாளுடன் சுற்றிய இளைஞா் கைது
By DIN | Published On : 06th April 2022 12:00 AM | Last Updated : 06th April 2022 12:00 AM | அ+அ அ- |

கமுதி: கமுதி அருகே கையில் வாளுடன் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் சுற்றித்திரிந்த இளைஞரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை அடுத்துள்ள நெருஞ்சிப்பட்டியைச் சோ்ந்தவா் பழனிச்சாமி மகன் சூா்யா(19). இவா் செவ்வாய்க்கிழமை நெருஞ்சிப்பட்டி பேருந்து நிறுத்தத்தில் கையில் வாளுடன் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் சுற்றித் திரிந்ததாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. அதன்பேரில் கோவிலாங்குளம் போலீஸாா் விரைந்து சென்று சூா்யாவைக் கைது செய்து, அவரிடமிருந்து வாளை பறிமுதல் செய்தனா்.