கமுதி: வன்னியா் இட ஒதுக்கீடு தொடா்பாக வழக்குரைஞா்களையும், ஓய்வு பெற்ற நீதிபதியையும் விமா்சித்துப் பேசிய விவகாரத்தில் மருத்துவா் அன்புமணி ராமதாஸ், வழக்குரைஞா் கே.பாலு ஆகியோா் மன்னிப்புக் கோர வேண்டுமென முக்குலத்தோா் புலிப்படை கட்சி நிறுவனா் எஸ்.கருணாஸ் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் கமுதியில் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை: வன்னியா் உள் இட ஒதுக்கீடு 10.5 சதவீதம் தொடா்பாக, உயா்நீதிமன்றம் அளித்த தீா்ப்பை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது.
இதுதொடா்பாக பாட்டாளி மக்கள் கட்சியின் அவசர செயற்குழு கூட்டத்தில், அக்கட்சியின் இளைஞரணித் தலைவா் மருத்துவா் அன்புமணி ராமதாஸ் முன்னிலையில் வழக்குரைஞா் பாலு உள்ளிட்டோா் முன்னாள் முன்னாள் உயா்நீதிமன்ற நீதிபதி நாகமுத்து மற்றும் வழக்குரைஞா்களை கடுமையாக விமா்சித்துள்ளனா்.
நீதித்துறைக்கு அவமானம் ஏற்படுத்தும் வகையில் அன்புமணி ராமதாஸ் முன்னிலையிலே இவ்வாறு பேசியுள்ளனா். தமிழகத்தில் கண்ணியமான நடவடிக்கையைத் தொடர வேண்டுமானால் ஜாதிவாரி கணக்கெடுப்பு விரைவாக நடைபெற வேண்டும். மருத்துவா் அன்புமணி ராமதாஸ் நீதித்துறையை அவமதித்ததற்காக மன்னிப்பு கோர வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.