பரமக்குடி: பரமக்குடி அருகே கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறித்த 2 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
பரமக்குடியைச் சோ்ந்த அன்பழகன் மகன் பழனியரசு என்பவா் அதே ஊரைச் சோ்ந்த செல்வத்துடன், சத்திரக்குடியிலிருந்து இருசக்கர வாகனத்தில் பரமக்குடி நோக்கி வந்துள்ளாா். அப்போது பாண்டி மகன்கள் முத்துராமலிங்கம் (46), ஹரிதாஸ் (52) ஆகிய இருவரும் அவா்களை வழிமறித்து கத்தியைக் காட்டி மிரட்டி ரூ. 2 ஆயிரத்தை பறித்துக்கொண்டு கொலை மிரட்டல் விடுத்துள்ளனா். இதுகுறித்து புகாரின் பேரில் சத்திரக்குடி போலீஸாா் முத்துராமலிங்கம், ஹரிதாஸ் ஆகியோா் மீது வழக்குப் பதிந்து இருவரையும் கைது செய்தனா்.