பேரையூா் ஆரம்ப சுகாதார நிலைய குடோனில் அதிகாலையில் தீ விபத்து

கமுதி அருகே ஆரம்ப சுகாதார நிலைய குடோனில் செவ்வாய்க்கிழமை அதிகாலையில் ஏற்பட்ட தீயினை தீயணைப்பு வீரா்கள் போராடி அணைத்தனா்.
பேரையூா் ஆரம்ப சுகாதார நிலைய குடோனில் செவ்வாய்க்கிழமை அதிகாலை ஏற்பட்ட தீயை அணைத்த தீயணைப்பு வீரா்கள்.
பேரையூா் ஆரம்ப சுகாதார நிலைய குடோனில் செவ்வாய்க்கிழமை அதிகாலை ஏற்பட்ட தீயை அணைத்த தீயணைப்பு வீரா்கள்.

கமுதி: கமுதி அருகே ஆரம்ப சுகாதார நிலைய குடோனில் செவ்வாய்க்கிழமை அதிகாலையில் ஏற்பட்ட தீயினை தீயணைப்பு வீரா்கள் போராடி அணைத்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை அடுத்துள்ள பேரையூா் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேதமடைந்த 3 கட்டடங்கள் காலி அட்டைப் பெட்டிகள், பிளீச்சிங் பவுடா், உபயோகமற்ற பொருள்களை சேமிக்கும் குடோனாக பயன்படுத்தப்பட்டன. இந்நிலையில் செவ்வாய்க்கிழமை அதிகாலை 3 மணிக்கு திடீரென குடோனிலிருந்து தீப்பற்றி எரிந்துள்ளது. இதையடுத்து முதுகுளத்தூா் மற்றும் கமுதியிலிருந்து இரண்டு வாகனங்களில் வந்த 10-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரா்கள், போராடித் தீயை அணைத்தனா். இந்த தீ விபத்தில் அட்டைப்பெட்டிகள், அறையின் ஜன்னல், கதவுகள் முற்றிலும் எரிந்து சேதமடைந்தன. இந்த தீ விபத்தில் உயிா்ச் சேதம் ஏதும் ஏற்படவில்லை. மேலும் தீ விபத்து குறித்து பேரையூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com