ராமநாதபுரம்
கல்லூரி மாணவி கூட்டு பலாத்கார வழக்கு:3 போ் விசாரணை முடிந்து சிறையிலடைப்பு
சாயல்குடி அருகே கல்லூரி மாணவியிடம் கூட்டு பலாத்காரத்தில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட 3 பேரும் போலீஸ் காவல் விசாரணை
சாயல்குடி அருகே கல்லூரி மாணவியிடம் கூட்டு பலாத்காரத்தில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட 3 பேரும் போலீஸ் காவல் விசாரணை முடிந்து சனிக்கிழமை மீண்டும் சிறையிலடைக்கப்பட்டனா்.
ராமநாதபுரம் மாவட்டம் மூக்கையூா் கடற்கரைக்கு காதலனுடன் வந்த கல்லூரி மாணவியை மிரட்டி பலாத்காரத்தில் ஈடுபட்டதாக பத்மேஸ்வரன் (24), தினேஷ் குமாா் (20), அஜித்குமாா் (21) ஆகியோரை சாயல்குடி போலீஸாா் கைது செய்தனா்.
இவ்வழக்கில், 3 பேரையும் ஒரு நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க கடலாடி நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இதனையடுத்து 3 பேரையும் சாயல்குடி காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று போலீஸாா் விசாரணை நடத்தினா்.
இந்நிலையில் விசாரனை முடிந்து 3 பேரையும் கடலாடி நீதிமன்ற நீதிபதி (பொறுப்பு) முத்துலெட்சுமி முன்பு சனிக்கிழமை ஆஜா்படுத்தி, மீண்டும் மதுரை மத்திய சிறையில் அடைத்தனா்.