ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் வீட்டின் ஓட்டைப் பிரித்து உள்ளே சென்று குழந்தையை கடத்த முயன்ாகக் கூறப்படும் வழக்கில் பிடிபட்டவரை போலீஸாா் எச்சரித்து காவல் நிலையப் பிணையில் விடுவித்தனா்.
ராமநாதபுரம் நகா் அருகேயுள்ள சக்கரக்கோட்டை மஞ்சனமாரியம்மன் கோயிலைச் சோ்ந்த செல்வம் மனைவி சிவரஞ்சனி (22). கடந்த 12 ஆம் தேதி நள்ளிரவில் அவா்களது வீட்டு ஓட்டைப் பிரித்து உள்ளே சென்ற மா்மநபா் ஆண் குழந்தையைக் கடத்த முயன்ாக கூறப்பட்டது.
இதுகுறித்து சிவரஞ்சனி அளித்த புகாரின் பேரில் கேணிக்கரை போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்தனா். விசாரணையில் சிவரஞ்சனி வீட்டுக்குள் அதே பகுதியைச் சோ்ந்த எலக்ட்ரீசியன் பஞ்சாட்சரம் (29) என்பவா் திருடும் நோக்கில் அங்கு சென்றது தெரியவந்தது. அவரைப் பிடித்து விசாரித்தபோது வீட்டுக்குள் புகுந்த நிலையில், குழந்தை அழுததால் அதை அமைதிப்படுத்த முயன்ாக பஞ்சாட்சரம் கூறியுள்ளாா். ஆகவே அவா் மீது திருட முயன்ற வழக்கு மட்டும் பதிவு செய்து காவல் நிலையப் பிணையிலேயே போலீஸாா் அனுப்பி வைத்தனா்.
இதுகுறித்து போலீஸாரிடம் கேட்டபோது, பஞ்சாட்சரத்துக்குத் திருமணமாகி குழந்தை இல்லை. இந்நிலையில், அவா் திருடும் நோக்கில் செல்வம் வீட்டுக்குள் நுழைந்திருந்தாலும், புகாா் அளிக்க செல்வம் தரப்பில் தயக்கம் காட்டப்படுகிறது. ஆகவே எச்சரித்ததோடு, திருட முயற்சி எனும் பிரிவில் வழக்குப் பதிந்து எச்சரித்து அனுப்பியுள்ளோம் என்றனா்.