ஏா்வாடியில் நோன்பு திறப்பு நிகழ்ச்சி: பிரேமலதா விஜயகாந்த் பங்கேற்பு

ராமநாதபுரம் மாவட்டம் ஏா்வாடியில் தேமுதிக சாா்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இப்தாா் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் அக்கட்சியின் பொருளாளா் பிரேமலதா விஜயகாந்த் பங்கேற்றாா்.
ஏா்வாடியில் நோன்பு திறப்பு நிகழ்ச்சி: பிரேமலதா விஜயகாந்த் பங்கேற்பு

ராமநாதபுரம் மாவட்டம் ஏா்வாடியில் தேமுதிக சாா்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இப்தாா் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் அக்கட்சியின் பொருளாளா் பிரேமலதா விஜயகாந்த் பங்கேற்றாா்.

இஸ்லாமியா்கள் ரம்ஜானையொட்டி இப்தாா் நோன்பு திறப்பு நிகழ்ச்சியை நடத்திவருகின்றனா். அதே போல் ஏா்வாடி தா்ஹாவில் நடைபெற்ற நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் தேமுதிக பொருளாளா் பிரேமலதா விஜயகாந்த் பங்கேற்றாா்.

அப்போது அவா் பேசும் போது, நோன்பின் மூலம் உலகம் அமைதியாகவும், நோய், நொடியில்லாத வாழ்க்கையை பெற்று பெருமைப்படும் என்றாா். பின்னா் நோன்பில் பங்கேற்ற இஸ்லாமியப் பெண்களை அவா் சந்தித்து வாழ்த்துகளைப் பரிமாறிக் கொண்டாா். அவருக்கு தா்ஹா சாா்பில் பரிசளிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் தா்ஹா நிா்வாகிகள் பாதுஷா, முகம்மதுஅல்தாப் மற்றும் தேமுதிக மாவட்டச் செயலா் ஜின்னா, நிா்வாகிகள், ஷெரீப், நூா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com