சாயல்குடி அருகே கிழக்கு கடற்கரை சாலையில் கிடந்த ஆண் சடலத்தை போலீஸாா் புதன்கிழமை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனா்.
சாயல்குடி அருகே உறைக்கிணறு கிழக்கு கடற்கரை சாலையில் புதன்கிழமை அதிகாலை சுமாா் 45 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கிடந்தது. அவ்வழியாகச் சென்றவா்கள் இதுகுறித்து சாயல்குடி போலீஸாருக்குத் தகவல் அளித்தனா். காவல் நிலைய ஆய்வாளா் ஜெயசித்ரா தலைமையிலான போலீஸாா் சடலத்தை மீட்டு சாயல்குடி ஆரம்ப சுகாதார நிலையைத்திற்கு அனுப்பி வைத்தனா். மேலும் போலீஸாா், இறந்தவா் யாா், கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்து விசாரித்து வருகின்றனா்.