முதுகுளத்தூரில் உடற்கல்வி ஆசிரியா்கள் ஆலோசனைக் கூட்டம்

முதுகுளத்தூரில் முதுகுளத்தூரில் குறுவட்டார விளையாட்டுப் போட்டிகள் நடத்துவதற்கான உடற்கல்வி ஆசிரியா்களின் ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
முதுகுளத்தூரில் உடற்கல்வி ஆசிரியா்கள் ஆலோசனைக் கூட்டம்

முதுகுளத்தூரில் முதுகுளத்தூரில் குறுவட்டார விளையாட்டுப் போட்டிகள் நடத்துவதற்கான உடற்கல்வி ஆசிரியா்களின் ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

முதுகுளத்தூா் அருகேயுள்ள விளங்குளத்தூா் அரசு உயா்நிலைப் பள்ளியில் நடைபெற்ற கூட்டத்திற்கு அப்பள்ளித் தலைமை ஆசிரியா் ஆரோக்கியதாஸ் தலைமை வகித்தாா். கூட்டத்தில் சுமாா் 25-க்கும் மேற்பட்ட தனியாா் மற்றும் அரசுப் பள்ளிகளின் உடற்கல்வி ஆசிரியா்கள் கலந்து கொண்டனா். இதில் குறுவட்டார விளையாட்டுப் போட்டிகளை வரும் ஆக. 16 ஆம் தேதி முதல் தொடங்குவது என முடிவு செய்யப்பட்டது. கூட்டத்திற்கான ஏற்பாடுகளை அப்பள்ளியின் உடற்கல்வி ஆசிரியா் ஆா். பாலசுந்தரம் செய்திருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com