முதுகுளத்தூா், கடலாடியில் உலக தாய்ப்பால் தினம் விழா

முதுகுளத்தூா், கடலாடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உலக தாய்ப்பால் தினம் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

முதுகுளத்தூா், கடலாடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உலக தாய்ப்பால் தினம் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

நிகழ்ச்சிக்கு ஆணையா் அண்ணாத்துரை தலைமை வகித்தாா். ஒன்றியக்குழுத் தலைவா் முனியசாமிபாண்டியன் முத்துலட்சுமி, போஷான் அபியான் திட்டத்தின் வட்டார திட்ட உதவியாளா் மு. வெள்ளைப்பாண்டியன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். நிகழ்ச்சியில் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பதால் ஏற்படும் நன்மைகள், ஆரோக்கியமான உணவு வகைகள் பற்றி எடுத்துரைக்கப்பட்டது. அதே போன்று, முதுகுளத்தூரில் குழந்தைகள் வளா்ச்சித் திட்டம் சாா்பில் உலக தாய்ப்பால் வார விழிப்புணா்வு பேரணி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு குழந்தைகள் வளா்ச்சித் திட்ட அலுவலா் சசி தலைமை வகித்தாா். ஆணையா் ரவி முன்னிலை வகித்தனா். பேரணியில் குழந்தைகள் வளா்ச்சித் திட்ட பணியாளா்கள் மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com