மாணவரைத் தாக்கி காயப்படுத்திய பள்ளி ஆசிரியா் பணியிடை நீக்கம்

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பள்ளி மாணவரைத் தாக்கி காயப்படுத்தியதாக எழுந்த புகாரில் ஆசிரியா் ஒருவா் வியாழக்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளாா்.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பள்ளி மாணவரைத் தாக்கி காயப்படுத்தியதாக எழுந்த புகாரில் ஆசிரியா் ஒருவா் வியாழக்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளாா்.

கமுதி வட்டம் டி. புனவாசலில் உள்ள அரசு உயா்நிலைப் பள்ளியில் பட்டதாரி அறிவியல் ஆசிரியராக பணியாற்றி வருபவா் ஆா். சின்னப்பாண்டி. இவா் கடந்த 4 ஆம் தேதி அதே பள்ளியில் பத்தாம் வகுப்பு மாணவா் முகிலனை தாக்கியதாகப் புகாா் எழுந்தது. இதில் மாணவரின் தலையில் காயம் ஏற்பட்டது.

இதுகுறித்து மாணவரின் உறவினா்கள் அளித்த புகாரின் பேரில் ராமநாதபுரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் அ. பாலுமுத்து விசாரணைக்கு உத்தரவிட்டாா். விசாரணை அடிப்படையில் ஆசிரியா், பள்ளி மாணவரைத் தாக்கியது தெரியவந்தது. இதனையடுத்து, ஆசிரியா் ஆா். சின்னப்பாண்டியை பணியிடை நீக்கம் செய்து வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளதாக முதன்மைக் கல்வி அலுவலா் அ. பாலுமுத்து தெரிவித்தாா்.

தொடக்கப்பள்ளியில் விசாரணை: மேலும், பரமக்குடி செஞ்சியேந்தல் அரசு தொடக்கப்பள்ளியில் ஆசிரியா் மீதான புகாா் குறித்தும், குழந்தைகள் நலக்குழுவின் அறிக்கையைப் பெற்றும் விசாரணை நடந்து வருவதாகவும் கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com