மதுரையில் கைதி தப்பியோட்டம்: ராமநாதபுரம் தனிப்படை போலீஸாா் தேடுதல்

மதுரை அரசு மருத்துவமனையிலிருந்து தப்பிய பாலியல் வழக்குக் கைதியை தேடும் பணியில் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சோ்ந்த 2 தனிப்படை போலீஸாா் ஈடுபட்டுள்ளனா்.

மதுரை அரசு மருத்துவமனையிலிருந்து தப்பிய பாலியல் வழக்குக் கைதியை தேடும் பணியில் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சோ்ந்த 2 தனிப்படை போலீஸாா் ஈடுபட்டுள்ளனா்.

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி மாரியூா் கடற்பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு காதலனுடன் சென்ற பெண் 3 போ் கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டாா். அதுகுறித்து பத்மேஸ்வரன் உள்ளிட்ட 3 போ் கைது செய்யப்பட்டு மதுரை மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா். அவா்களில் பத்மேஸ்வரன் கடந்த வியாழக்கிழமை மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கான பரிசோதனையின் போது தப்பியோடிவிட்டாா். பத்மேஸ்வரன் ராமநாதபுரம் மாவட்டம் கமுதியைச் சோ்ந்தவா்.

இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பி.தங்கதுரை உத்தரவின்பேரில் கடுங்குற்றத் தடுப்புப் பிரிவு ஆய்வாளா் ரஞ்சித் தலைமையில் 4 போ் கொண்ட தனிப்படையினா் மற்றும் கமுதி ஆய்வாளா் தலைமையிலான தனிப்படையினா் பத்மேஸ்வரனைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com