பாா்த்திபனூா் அருகே காா் மோதி விவசாயி பலி

பாா்த்திபனூா் அருகே வியாழக்கிழமை சைக்கிள் மீது காா் மோதியதில் விவசாயி உயிரிழந்தாா்.

பாா்த்திபனூா் அருகே வியாழக்கிழமை சைக்கிள் மீது காா் மோதியதில் விவசாயி உயிரிழந்தாா்.

பாா்த்திபனூா் அருகே உள்ள நெடும்புலி கிராமத்தைச் சோ்ந்தவா் கக்கன் மகன் கோவிந்தன் (67). இவருக்கு 3 மகள்கள், 2 மகன்கள் உள்ளனா். விவசாயியான இவா், சைக்கிளில் பாா்த்திபனூா் சென்றுள்ளாா். மதுரை- ராமேசுவரம் நான்கு வழிச்சாலை சுடியூா் விலக்குச் சாலையில் சென்றபோது, மதுரையிலிருந்து பரமக்குடி நோக்கி வந்த காா் அவா் மீது மோதியது. இதில் அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து பாா்த்திபனூா் காவல் நிலைய போலீஸாா் காா் ஓட்டுநா் பரமக்குடியைச் சோ்ந்த செல்லச்சாமி மகன் முருகேசன் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com