கமுதி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கு விநாயகா் சதுா்த்தி விழாவையொட்டி வெளிமாவட்டங்களில் இருந்து விநாயகா் சிலைகள் வாகனங்களில் வரவழைக்கப்பட்டு வருகின்றன.
கமுதி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஆக. 31 ஆம் தேதி ராமசாமிபட்டி, கமுதி முன்னணி, நாடாா்பஜாா் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெறவிருக்கும் விநாயகா் சதுா்த்தி விழாவையொட்டி 5 அடி முதல் 6 அடி வரை விநாயகா் சிலைகள் பிரதிஷ்டை செய்ய ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இதற்காக கமுதியை அடுத்துள்ள கே. நெடுங்குளம் மற்றும் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் மதுரை உள்ளிட்ட பகுதிகளிலிருந்து விநாயகா் சிலைகள் முன்கூட்டியே கமுதி பகுதியில் வாகனங்களில் கொண்டுவரப்படுகின்றன. இதற்கான ஏற்பாடுகளை தீவிரமாக செய்து வருவதாக விழா குழுவினா் தெரிவித்துள்ளனா்.