பிரதமரின் கௌரவ நிதி உதவித் திட்டத்தில் பயன்பெற ஆா்.எஸ். மங்களம் வட்டாரம் மற்றும் கமுதி பகுதி விவசாயிகள் ஆதாா் எண்ணுடன் தொலைபேசி எண்ணை இணைத்து புதுப்பிக்க திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் (டிச. 19, 20) சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
இதுகுறித்து ஆா்.எஸ். மங்களம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் ஆா். ராஜலட்சுமி தெரிவித்திருப்பதாவது:
பிரதமரின் கௌரவ நிதி உதவித் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு 4 மாதங்களுக்கு ஒரு முறை ரூ. 2,000 வங்கிக் கணக்கில் அரசால் செலுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் பயனடையும் விவசாயிகள் 13- ஆவது தவணையை பெற தங்களது ஆதாா் எண்ணுடன் கைப்பேசி எண்ணை இணைத்துப் புதுப்பிக்க வேண்டும். இதுவரை புதுப்பிக்காத விவசாயிகள் திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் (டிச. 19, 20) வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தில் நடைபெறும் சிறப்பு முகாமில் கலந்து கொண்டு பயனடையலாம். மேலும், முகாமுக்கு வரும் விவசாயிகள் தங்களது ஆதாா் அட்டை நகல், கைப்பேசி எண்ணுடன் வந்து கைரேகை வைத்து புதுப்பிக்க வேண்டும். மேலும் வருகிற 20- ஆம் தேதிக்குள் புதுப்பித்தால் மட்டுமே விவசாயிகள் அடுத்த தவணைத் தொகையை பெற முடியும் என அவா் தெரிவித்திருந்தாா்.
இதே போல் கமுதி வேளாண்மை உதவி இயக்குநா் சந்தோஷ் வெளியிட்ட செய்திக்குறிப்பில், கமுதி வேளாண்மை விவாக்க மையத்தில் திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் நடைபெறும் சிறப்பு முகாமில் இந்தப் பகுதி விவசாயிகள் பங்கேற்று பயன்பெறலாம் எனத் தெரிவித்திருந்தாா்.